தாவர கழிவுகளில் இருந்து `பையோ பிளாஸ்டிக்`: இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

செல்ஃபோன்கள், கிளாஸ்கள், மருந்துகள், டூத்பிரஷ்கள் மற்றும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் நம் வாழ்வை எளிதாக்கிவிட்டன. ஆனால், இந்த பிளாஸ்டிக் பொருள்கள் குப்பையாக மாறும் போது, சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்காக உள்ளது. இதற்கு கெளஹாத்தி ஐ.ஐ.டியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பையோ பிளாஸ்டிக் மூலம் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்.